Wednesday, October 14, 2009

திரு. ராமசுவாமியும் முதல் கணினி தேர்வும்

எப்படியோ நான் விரும்பிய துறை கிடைத்துவிட்டது.

அந்த வருடம் எங்கள் பாலிடெக்னிக்கில் புதியாதாக ஒரு கணினி வாங்கினோம். அதுவரை எங்கள் பாலிடெக்னிக்கில் மினி கம்ப்யூட்டர் ஒன்று இருந்தது. அந்த வருடம் ஒரு மைக்ரோ கம்ப்யூட்டர் வாங்கினோம். வாங்கிய அன்றே எங்கள் துறை மாணவர்கள் அனைவருக்கும் திரு.ராமசுவாமி அவர்கள் ஒரு கணினி அறிமுக வகுப்பு நடத்தினார். அத்துடன் அன்று முதல் மாலையில் விருப்பப்பட்ட மாணவர்களுக்கு "பேசிக்" ப்ரோக்ரம் சொல்லியும் கொடுத்தார். அந்த வகுப்பில் முதலில் பதினெட்டு மாணவர்கள் இருந்தோம். ஒரே மாதத்தில் பலர் கழண்டுகொண்டனர். முடிவில் என்னையும் சேர்த்து ஆறு மாணவர்கள் மட்டுமே மிஞ்சினோம். இது என்னை போலவே எல்லா மாணவர்களும் கணினி கற்று கொள்ள ஆர்வமாய் இருப்பார்கள் என எண்ணிய எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. இதிலும் ஒரு நன்மை இருக்கவே செய்தது. அதாவது எஞ்சிய எங்களுக்கு கணினியில் பயிற்சி எடுத்துக்கொள்ள அதிக நேரம் கிடைத்தது.

சுமார் ஒரு மாத காலத்திற்கு பிறகு திரு.ராமசுவாமி அவர்கள் எங்களுக்கு ஒரு தேர்வு வைத்தார். பேசிக்கில் ஒரு கொடியின் படம் வரைய ப்ரோக்ரம் செய்ய வேண்டும். என்ன கொடி? அது கம்யூனிஸ்ட்களின் அரிவாள் கொடி. ஆம். திரு. ராமசுவாமி அவர்கள் ஒரு வித்தியாசமான கம்யூனிஸ்ட் ஆதரவாளர். அவருக்கு கணினியும் பிடிக்கும். கம்யூனிசம்மும் பிடிக்கும்.
அவருடைய வழிகாட்டுதலில் ஆறே மாதங்களில் ப்ரோக்ரம் செய்வதில் நல்ல தேர்ச்சி பெற்று விட்டேன். நான்காம் செமஸ்டர் தொடங்கிய உடனே என்னை அவர் அவருக்கு உதவியாக அந்த கணினிகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை வழங்கினார். இரண்டாம் ஆண்டிலேயே இந்த மாதிரி பொறுப்பை நான் பெற்றதில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பலருக்கு காண்டு. அவர்கள் எனக்கு ஒரு சரியான ஆப்பு வைத்தார்கள்!

அன்பன் கிராம்

No comments: