Thursday, June 18, 2009

என்னைப்பற்றி !

அன்பு வலைப்பூ நண்பர்களே சற்றே நெடிய பிரிவிற்கு பிறகு மீண்டும் எழுதுகிறேன் !

என்னைப்பற்றி ...

நான் அமெரிக்காவில் வசித்து வருமொரு கணினி பொறியாளன். நெடு நாள் வலைப்பூ வாசகன். ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்களாக இந்த துறையில் உள்ளேன். பலரும் வலைப்பூவில் தங்கள் அனுபவங்களை எழுதுவதை கண்டு என்னுடைய நீண்ட அனுபவங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.

நான் பகிர்ந்துகொள்ளும் நிகழ்வுகள் இந்தியாவில் கணினித்துறை சற்று காலூன்ற தொடங்கிய கால நிகழ்வுகள். அப்பொழுதெல்லாம் கணினி என்றால் சமூகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் வசதி படைத்தவர்களும், பெரிய கம்பெனிகளிலும் மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. என்ட்ரி லெவல் என்று சொல்ல கூடிய கணணிகளே பல லட்சங்களுக்கு விற்று கொண்டிருந்த காலம் அது. அச்சமையத்தில் நான் ஒரு "Field Sales & Support Engineer", அதாவது கணினி விற்கும், சேவை செய்யும் பொறியாளனாக இருந்தேன். அதனால் பல பெரிய மனிதர்களுடன் பழகவும் அவர்களை அறிந்து கொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த பதிவுகளில் அவற்றில் மிக சுவையான, வித்தியாசமான அனுபவங்களை பகிர்ந்துகொள்ள எண்ணம்.என்னுடைய கன்னி முயற்சிக்கு தங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் கிராம்



No comments: