Sunday, March 2, 2008

வணக்கம்! வந்தனம்!

தன்தனத்தோம் என்று சொல்லியே ப்ளாகினில் எழுத, ஆமா எழுத,வந்தருள்வாய் கலைமகளே !!!

நண்பர்களே வணக்கம் !!!

ரொம்ப நாட்களாகவே என்னுடைய எண்ணங்களை, அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆவல். அது இன்று கை கூடியதில் மிக்க மகிழ்ச்சி.

நான் ப்ளாகிங்கை பொறுத்தவரை ஒரு ஏகலைவன்! ஆனால் ஏகப்பட்ட துரோனசார்யர்கள் எனக்கு. திரு.டோண்டு ராகவன் அவர்கள், திரு.டி.பி.ர். ஜோச·ப் அவர்கள், திரு. பாலா அவர்கள், திரு. இட்லி வடை அவர்கள் மற்றும் பலர். எல்லார் பெயரையும் எழுத பயமாய் இருக்கிறது. இருப்பது பத்து விரல்கள் தானே !

என்னை ஈன்றேடுத்து, ஆளாக்கிய என் அன்னையையும், எல்லாஆசான்களையும் மானசீகமாய் வணங்கி என் உளறல்களை ஆரம்பிக்கிறேன் !

இனி என்ன நான் எழுதி கொண்டே இருப்பேன். படித்து தொலைக்க வேண்டியது உங்கள் தலைவிதி

அன்புடன் கிராம் !

No comments: